Sunday 29 July 2012

The Pension Funds performed better

Posted: 27 Jul 2012 06:27 AM PDT
   The three NPS managers handling the pension funds of Central and state government employees have delivered average returns of 9.33% in the past one year, outperforming the state-run government provident fund (GPF), employees provident fund (EPF) and the public provident fund (PPF). The three-year annualised returns are also quite decent at 8.47%, though not as spectacular as in the past one year.
   More than 16 lakh central and state government employees have almost Rs 8,500 crore invested in the NPS. This money is managed by three pension fund managers - SBI Pension Funds, LIC Pension Fund and UTI Retirement Solutions. Each of the three funds manages roughly one-third of the NPS corpus.
   Though three years is a very short time to judge long-term instruments such as pension funds, the impressive performance is likely to silence the criticism that NPS is not allocating enough to growth assets. Central and state government NPS funds can invest a maximum of 15% in equities. Even in NPS for the general public, where investors can choose their own asset allocation, a maximum of 50% can be put in equities.
RETURNS OF SCHEMES FOR GOVT. EMPLOYEES

Central Govt.
State Govt.
1-Year
3-Year
1-Year
3-Year
LIC Pension Fund       
9.12%    
8.20%              
9.94%        
9.17%
SBI Pension Fund        
8.96%    
7.83%              
9.79%       
9.13%
UTI Retirement          
8.69%       
7.36%           
9.50%         
9.18%
Average                        
8.92%         
7.80%         
9.74%         
9.17%
   The Pension Funds Regulatory and Development Authority has defended this conservative allocation saying that pension funds should not have a large exposure to risky assets.
   The past few years have proved it right. Equity markets have floundered in the past one year, with the Nifty falling 6.5%. In the past three years, it has delivered an annual average growth of 4.95%. But government securities and other debt instruments have rallied in recent months following rate cuts by the RBI. After a lacklustre two years between 2009 and 2011, gilts shot up in 2012 as benchmark yields tumbled. The gilt funds managed by the six fund managers of the NPS for the general public have risen by almost 9.95% in the past one year. This has helped shore up the overall returns from the NPS funds.
Courtesy:http://articles.economictimes.indiatimes.com/2012-07-24/news/32828157_1_uti-retirement-solutions-lic-pension-fund-nps-funds

Wednesday 25 July 2012

கடவுள் அணு’வும் சிவனின் நடனமும்! – எஸ்.குருமூர்த்தி

கடவுள் அணு’வும் சிவனின் நடனமும்! – எஸ்.குருமூர்த்தி


‘கடவுள் அணு’ என்று விஞ்ஞானிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட, எல்லா அணுக்களிலும் நுண்ணியதும், ஆதாரமானதுமான நுண்மையான அணுவை, சுமார் 14 ஆண்டுகள் முயற்சி செய்து, ஏறக்குறைய ரூ.20,000 கோடி செலவு செய்து, ஸ்விட்சர்லாந்து – பிரான்ஸ் நாட்டு எல்லையில் உருவாக்கப்பட்ட ‘செர்ன்’ என்கிற விஞ்ஞான ஆராய்ச்சி சாலை, அடையாளம் கண்டு விட்டதாக ஜூலை 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டபோது உலகமே வியந்தது. இந்த ‘கடவுள் அணு’ என்று அழைக்கப்படும் துண்டு அணுவுக்கு உண்மையான பெயர் ‘ஹிக்ஸ்-போசான்’ என்பது. இது இரண்டு விஞ்ஞானிகளுடைய பெயர்களின் இணைப்பு. இதில் ஹிக்ஸ் என்பது இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியின் பெயர். இவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்.


1998-ல் துவங்கிய இந்த விஞ்ஞான முயற்சி எல்லாவற்றுக்கும், 74 ஆண்டுகளுக்கு முன், 1924-ஆம் ஆண்டு பிள்ளையார் சுழி இட்டவர், நம் நாட்டு விஞ்ஞானியான கல்கத்தாவைச் சேர்ந்த சத்யேந்திரநாத் போஸ் என்கிற இளைஞர். 1894-ல் பிறந்த இவர், 1924-ஆம் ஆண்டு அணுவையும் அணுசக்தியையும் கண்டுபிடித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு, ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை அனுப்பினார். அப்போது அவருக்கு 30 வயது. அவரும் ஐன்ஸ்டீனும் சேர்ந்து செய்த ‘ஐன்ஸ்டீன் - போஸ் கண்டேன்செட்’ என்கிற கண்டுபிடிப்புதான், செர்ன் விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்திருக்கும் நுண் அணுவைத் தேடுவதன் துவக்கம். அணுக்களுக்கு உப அணுக்கள் உண்டு என்பதற்கு போஸின் சிந்தனைதான் துவக்கமாக இருந்தது.

அவருடைய பெயரில் ஒரு அங்கமான ‘போஸ்’தான் ஹிக்ஸ்-போசான்’ என்கிற இரட்டைப் பெயரில் இரண்டாவது அங்கமாக இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வுதான் இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளின் பிரம்மாண்டமான முயற்சியாக மாறி, ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. செர்ன் அமைப்பின் விஞ்ஞானிகள் கூறியிருப்பது இதுதான்: ‘இதுவரை ஹிக்ஸ்-போசான் என்கிற நுண்ணணு இருக்கிறது என்று நினைத்தது சரி என்று தோன்றுகிறது. நாங்கள் கண்டுபிடித்திருப்பது 99.999 சதவிகிதம் அதுதான். இந்த அணுதான் பிரபஞ்சத்தில் இருக்கும் தோற்றம், பரிமாணம், உருவமைப்பு சம்பந்தப்பட்ட எல்லா ரகசியத்திற்கும், கேள்விகளுக்கும் விடையாக இருக்கும். இதன் மூலம் தெளிவு கிடைக்கிற வாய்ப்பு இருப்பதால், இந்த அணுவை ‘கடவுள் அணு’ என்று ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூற, எல்லோரும் அப்படியே இந்த அணுவை அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘ஹிக்ஸ்-போசான்’ அணுவுக்கும், பாரத நாட்டுக்கும் தொடர்புண்டு. இதை சத்யேந்திரநாத் போஸ் மட்டுமல்ல, செர்ன் விஞ்ஞானிகளின் அமைப்பின் அதிகாரபூர்வ அறிவிப்பாளரான பாவ்லோ குபிலினோ, இந்தக் கண்டுபிடிப்பு வெளிவருவதற்குப் பல மாதங்களுக்கு முன்னரே, அக்டோபர் 2011-ல், ‘பாரத நாடுதான் இந்தக் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்குத் தாய்’ என்று பட்டவர்த்தனமாகக் கூறினார். எங்கோ ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் செய்யும் இந்த முயற்சிக்கு, எப்படி பாரதம்தான் தாய் என்று அவர் கூறினார்?

பாரத நாட்டுக்கும், இந்த கடவுள் அணு என்று நம்பப்படும் ‘ஹிக்ஸ்-போசான்’ அணுவுக்கும் வேறு என்ன தொடர்பு? அந்தத் தொடர்பை அறிய வேண்டுமென்றால், 2004-ஆம் ஆண்டு செர்ன் ஆய்வுக்கூடத்தில் நிகழ்ந்த ஓர் அதிசயமான நிகழ்ச்சி பற்றித் தெரிய வேண்டும்.

2004 ஜூன் 18 அன்று செர்ன் ஆய்வுக் கூடத்தின் அரங்கத்தில், 6 அடி உயரம் கொண்ட சிதம்பரம் நடராஜர் சிலை நிர்மாணம் செய்யப்படுகிறது. சரி, செர்ன் ஆராய்ச்சி சாலையில் நடனம் ஆடும் சிவனுக்கும் – அதாவது, நடராஜருக்கும், செர்ன் அமைப்பில் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்கும் என்ன சம்பந்தம்? யாரோ ஒரு சிவ பக்தர் இதைச் செய்தார் என்று நினைக்க வேண்டாம். நமது மதச் சார்பற்ற அரசாங்கம்தான் இந்தச் சிலையை அனுப்பி, அங்கு அமைத்தது. அழகாக இருக்கிறது என்பதற்காக நடனமாடும் நடராஜரின் சிலை அங்கு அனுப்பப்படவில்லை. அப்படி, ஒரு மதம் சம்பந்தப்பட்ட ஒரு தெய்வத்தின் சிலையை அமைக்க விஞ்ஞானிகள் அனுமதிக்கவும் மாட்டார்கள்.

ஏன், நம் சமயச் சார்பற்ற அரசாங்கம், செர்ன் விஞ்ஞான கூடத்தில் ஹிந்துக்கள் வணங்கும் நடராஜர் சிலையை அமைத்தது? அந்த விஞ்ஞானிகளின் அமைப்பு அதை ஏன் அனுமதித்தது? 1972-ஆம் ஆண்டு, ப்ரிட்ஜாப் காப்ரா என்கிற பிரபல அமெரிக்க பௌதிக விஞ்ஞானி 'The Dance of Shiva: The Hindu view of matter in the light of Modern Physics' (சிவனின் நடனம் : நவீன பௌதிகத்தின் பார்வையில் வஸ்த்துக்களை பற்றிய ஹிந்துக்களின் நோக்கு) என்கிற தலைப்பில் Main currents in Modern Thought என்கிற விஞ்ஞான சம்பந்தப்பட்ட பத்திரிகையில், சிவனின் நடனத்துக்கும், உப அணுக்களின் நடனத்துக்கும் உள்ள இணக்கத்தைப் பற்றி முதலில் விவரமாக எழுதினார்.

1975-ஆம் ஆண்டு இந்தக் கட்டுரையை ’The Tao of Physics' என்கிற தலைப்பில் ஒரு பெரிய புஸ்தகமாக அவர் எழுதினார். அது உலகிலேயே அதிகம் விற்ற புஸ்தங்களில் ஒன்றாகப் பிரபலமாகியது.

செர்ன் ஆய்வு கூடத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் சிவனின் சிலையின் பீடத்திற்கு அருகிலுள்ள ஒரு பலகையில், ப்ரிட்ஜாப் காப்ரா தன்னுடைய ’The Tao of Physics'புஸ்தகத்தில் எழுதிய சில வரிகள் இது:

“ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்தியக் கலைஞர்கள், உலோகங்களில் நடராஜரின் நடனத்தை அழகாகச் சித்திரித்தனர். நம் நவீன காலத்தில் பௌதிக விஞ்ஞானிகள், மிகவும் நுண்ணிய தொழில் நுட்பத்தின் மூலமாக இசைவுடன் கூடிய பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடன வகைகளைச் சித்திரிக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தின் (அணுக்களின்) நடனம், நவீன பௌதிகத்தையும், ஹிந்து சமயக் கலைகளையும், பண்டைய புராணங்களையும் இணைக்கிறது... நவீன விஞ்ஞானம், சீராக இணைந்து செயல்படும் படைப்பு மற்றும் அழிப்பு இரண்டும் (தோன்றி மாறும் பருவ காலங்கள், பிறந்து இறக்கும் ஜீவராசிகள் மட்டுமல்லாமல்) உயிரில்லாத வஸ்துகளுக்கும் பொருந்தும். உயிரில்லாத ஜட வஸ்துகளும் தோன்றி மறைகின்றன என்று நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. ஆகவே, நவீன பௌதிக விஞ்ஞானிகளுக்கு சிவனுடைய நடனமே உப அணுக்களின் நடனம்”.


காப்ராவுக்கு பசிபிக் கடல் கரையில் ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாகத்தான் அவர் நடராஜரின் நடனத்துக்கும், அணு விஞ்ஞானத்துக்கும் உள்ள சம்பந்தத்தை உணர்ந்தார். கடலைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு கடல் அலைகள், சூரிய கிரணங்களின் அலைகள், சிந்தனை அலைகள் எல்லாமே ஒரே சீரான (அணு விஞ்ஞான) நடனத்தின் பிரதிபலிப்பாகப் பட்டது. ‘எப்படி இந்தியச் சித்தர்கள் படைப்பைப் பிரிக்க முடியாத, எப்போதுமே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நடப்பாகப் பார்த்தார்களோ, அப்படியேதான் நவீன பௌதிக விஞ்ஞானமும் பிரபஞ்சத்தைக் காண்கிறது’ என்று கூறினார் காப்ரா.

பிறப்பும், இறப்பும் நிற்பதே இல்லை. அதுபோல், பிரபஞ்சம் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அணுக்களின் நடனம், அணுக்களின் பிறப்பினாலும் இறப்பினாலும் நிற்காமல் தொடர்கிறது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (cosmic dance). அதுவே தான் நடராஜரின் நடனம் என்கிறார் காப்ரா. கோடானுகோடி அணுக்களை ஆட்டிப் படைக்கும் அவற்றுக்கு ஆதாரமாக இருக்கும் உப அணுவைத்தான், இப்போது கண்டுபிடித்துள்ளதாக செர்ன் அமைப்பின் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ‘நடராஜரின் பிரபஞ்ச நடனமும், அணுக்களின் நடனமும் ஒன்றே’ என்று கூறும் அளவுக்கு, விஞ்ஞானமும் ஹிந்து ஆன்மிகமும் நெருங்கி விட்டிருக்கிறது. அதனால்தான் கடவுள் அணுவைக் கண்டுபிடிக்கும் ஆய்வு கூடத்தில், தில்லை நடராஜர் நடனமாடிக் கொண்டிருக்கிறார்.

ஹிந்து ஆன்மிகமும் விஞ்ஞானமும், அணு விஞ்ஞானத்தின் அடிப்படையில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை, காஞ்சி மஹா ஸ்வாமிகள், ‘தெய்வத்தின் குரல்’ நூலில் விளக்குகிறார். இந்த விளக்கத்தை அவர் 1960-களில் கொடுத்திருக்க வேண்டும். அணு விஞ்ஞானம், அதுவரை ஜடமாக இருந்த விஞ்ஞானத்தை ஆன்மிகத்துடன் எப்படி இணைத்தது என்பதை, அவர் இப்படி விளக்குகிறார்:

“காண்கிற உலகம் பலவிதமாக இருந்தாலும், ஒன்றேதான் இத்தனையும் ஆகி இருக்கிறது என்பதை நவீன சையன்ஸ் தெளிவாக ஒப்புக் கொண்டு நிலைநாட்டுகிறது. 50 வருஷங்களுக்கு முன், உலக வஸ்துக்கள் எல்லாம் 72 மூலப் பொருள்களுக்குள் அடங்குவதாக சையன்ஸ் சொல்லி வந்தது. இந்த (ஜட) மூலப் பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டவை (அதாவது ஒன்றுடன் ஒன்று சேராதது) என்பதே அன்றைய கருத்து. ஆனால், இப்போது அணு (atom) பற்றிய அறிவு விருத்தியான பின், இந்த மூலப் பொருட்கள் எல்லாமும் கூட வேறான பொருள்கள் அல்ல என்றும், ஒரே சக்தி (energy)தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது என்றும் சையன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியுள்ளார்கள். பொருள் (matter), சக்தி (energy) – இவையும் வேறானவை அல்ல என்று சையன்ஸ் சொல்கிறது.

“ஐன்ஸ்டீன், சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல சயன்ஸ் நிபுணர்கள், அத்வைத சித்தாந்தத்திற்கு மிகவும் நெருங்கி வந்து விட்டார்கள். பிரம்மம்தான் பரமார்த்திக சத்தியம். உலகம் விவகார (நடைமுறை) சத்தியம் என்று அத்வைதம் சொல்வதைத்தான், இவர்கள் (விஞ்ஞானிகள்) ‘உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (relative) தான்; முழு உண்மை (absolute) அல்ல’ என்கிறார்கள்”. (இப்படி உலகம் ‘ஏதோ ஒன்றைச் சார்ந்தது’ என்கிற விஞ்ஞான தத்துவம்தான் ஐன்ஸ்டீனின்relativity theory!

ஆனால் விளைவுகளை வைத்துப் பார்த்தால், விஞ்ஞானத்துக்கும் அத்வைதத்துக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அது என்ன? மகா ஸ்வாமிகள், ‘சக்தியும் பொருளும் ஒன்று என்கிற பெரிய உண்மையைக் கண்ட அணு விஞ்ஞானிகள், அந்த அறிவைக் கொண்டே அணுகுண்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பதுதான் துக்கமாக இருக்கிறது. வெளி உலக வஸ்துக்களைக் குறித்து சையன்ஸால் நிலைநாட்டப்படும் அத்வைத தத்துவம், புத்திமட்டத்தோடு நின்றதன் அனர்த்தம் இது. சையன்ஸின் அத்வைதம் வெறும் அறிவோடும், வெளி உலகத்தோடும் மட்டும் நிற்காமல், வெளி உலகத்துக்குக் காரணமான உள் உலக உண்மையை ஆராய்ந்து, புத்தியோடு நிற்காமல் மக்களுடைய பாவனையிலும் தோய வேண்டும். ஜீவ குலம் எல்லாம் ஒன்றுதான் என்ற ஞானமும் சையன்ஸ் வழியாக ஏற்பட்டால், அணு குண்டைத் தயாரித்த சையன்ஸே ஆத்மஹானிக்குப் பதிலாக, மகத்தான ஆத்மக்ஷேமம் செய்ததாகவும் ஏற்படும்” என்கிறார்கள்.

‘கடவுள் அணு’ கண்டுபிடிப்பு, ஜீவ குலம் எல்லாம் ஒன்று என்கிற ஆன்மிக உண்மையைப் பரப்புமா? அல்லது அணுகுண்டைப் போல் பல மடங்கு நாசத்தை விளைவிக்கும் அனர்த்தத்தைச் செய்யுமா என்பது எதிர்காலத்தில்தான் விளங்கும்.

இவ்வளவு சூட்சுமமான உண்மையைத் தேட முதலில் வழி கோலிய சத்யேந்திரநாத் போஸுக்கு நம்முடைய அரசாங்கம் என்ன செய்தது? அவர் 1974 வரை வாழ்ந்தார். அவர் தன்னுடைய 80-ஆவது வயதில் இறந்தபோது, அவர் யார் என்று கூட நம் நாட்டில் யாருக்கும் தெரியாது. உப அணுக்கள் பற்றி அவருக்குக் கிடைக்க வேண்டிய நோபல் பரிசு, என்ரிகோ பெர்மி என்கிற இத்தாலிய நாட்டுக்காரருக்கு கிடைத்தது. 1954-ஆம் ஆண்டு போனால் போகிறது என்று அரசியல்வாதிகளிலிருந்து வணிகர்கள், நடிகர்கள், நடிகைகள் வரை எல்லோருக்கும் அளிக்கும் பத்மபூஷண் விருதை அவருக்கு அளித்தது அரசு.

அணு என்றால் என்ன?

அணு என்பதை கண்ணால் காண முடியாது, தொட்டு உணர முடியாது, நுகரவும் முடியாது. அப்படிப் பார்க்க முடியாத, உணர முடியாத, நுகர முடியாத அணுக்களால்தான், நம்முடைய உடல், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, குடிக்கும் நீர், நம்மைத் தாங்கும் நிலம், நாம் பார்க்கும் மரம், செடி, கொடி மற்றும் ஜடப் பொருள்கள் எல்லாமாக உருவாகியிருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் அணு. விஞ்ஞானப்படியும் நம்முடைய மெய்ஞானப்படியும் உண்மை. அந்த அணுக்களுக்குள் உப அணுக்கள் மறைந்திருக்கின்றன. அந்த அணுக்களை நிர்வகிக்கும் ‘கடவுள் அணு’ என்ற ஒன்று இருக்கிறது என்றால், எந்த அளவுக்கு சூட்சுமமானது அந்த அணு!

- நன்றி துக்ளக்

BMS to observe PENSION DAY on 1st August, 2012.

BMS. On 11-7-2012

BMS to observe PENSION DAY on 1st August, 2012.

       Pension has become the prime problem for all categories of workers/employees.  Government has been discussing this issue of Pension  Scheme-1995 since 2006. Committees were constituted but nothing could materialize till date.  It is to be noted that not a single paisa has been increased since the year  2000 in spite of continuous increase in prices of all commodities.  Presently, some  pensioners are getting only  Rs. 12/- per month as pension due to the faulty formula.  Therefore BMS  and other Central Trade Unions demanded  for a  minimum pension of Rs. 3000/- p.m. linked  with  consumer price index. The Government’s Committee recommended for Interim Pension as Rs. 1000/-p.m.  Even this too has not been considered. So, there is strong resentment  among pensioners under EPS-1995 and the prospective pensions.
         Similarly,  Government Employees  recruited after 2004 are barred from the usual pension scheme benefits as available to the Government employees.  The  pension schemes for  Banking and LIC Employees are also in the same fate.  It is astonishing to note that MLAs, MPs and several others are drawing a minimum pension of Rs. 15,000/- pm  without contribution, but  the workers are denied  and deprived of legitimate pension even though contributing to pension fund.
            As such, resentment and discontentment is prevailing in the minds of all categories  of employees.  Therefore, BMS has decided to observe PENSION DAY on 1st August, 2012.  Dharna and demonstrations would be held on the DAY before all PF Offices and other working places of the employees.
CALL FOR NATION WIDE AGITATION.
              A meeting of all Central Trade Unions was held today, i.e., 11th July, 2012 at BMS Central Office.  It was felt  by all Unions that in spite of all trade Union-united- industrial strike on 28th February, 2012  the Government did not resolve any of the basic  issues of workers, i.e., providing  Minimum Wages of Rs. 10,000/- pm for all categories of workers, Social Security for all unorganized sector workers, regularizations of workmen working as contract workers  and  workers of Anganwadi, Mid-day Meal,  Asha Karmi etc. and enhancing their payment at par with regular employees, abolition of contract and casual, and outsourcing systems,  strict implementation of labour laws etc.  Therefore the Central Trade Unions resolved to launch Nationwide  several  agitational  programmes during 2012-13, covering the employees  from Panhcayat level to Parliament level.  A National Convention  on 4 September 2012  at New Delhi would mark the beginning the year long agitation.

Jagdish Joshi
Office Secretary

Saturday 21 July 2012

Special Recruitment Drives

No.36038/1/2008-Estt.(Res)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel and Training
North Block, New Delhi,
Dated the 13th July, 2012.
OFFICE MEMORANDUM
Subject: Special Recruitment Drives for filling up backlog reserved vacancies for SC/ST/OBC and Persons with Disabilities : Notice of meeting.
   The undersigned is directed to refer to this Department’s Office Memorandum of even number dated 9th April. 2012, 10th May, 2012 and D.0 reminder of even number dated 31st May, 2012 whereby It was requested that all the Ministries/Departments may send the final progress report of the subject Drive as on 31.02.2012 by 30th April, 2012 which was later extended to 21st May, 2012.
   2. The final progress report of the Drive as on 31.03.2012 is still awaited from your Ministry/Department. The information is urgently required to apprise the Cabinet about the final outcome of the Drive.
   3. It has been decided to hold a meeting under the chairmanship of JS (AT&.A) to discuss the issue on 19.07.2012 at 2:30/3:30/4:30 P.M. in Room No. 119 of North Block New Delhi.
   4. It is request that an officer not below the rank of Deputy Secretary be deputed to attend the meeting and he may also bring the final progress reports of the Drives of the Ministry/Department, it is also informed that in case no progress report is received by 21stJuly, 2012, a NIL report be furnished to the Cabinet in respect of your Department.
sd/-
(Sharad Kumar Srivastava)
Under Secretary to the Government of India
Source:http://circulars.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02adm/36038_1_2008-Estt-Res-13072012.pdf

Monday 16 July 2012

ம.க.இ.க. என்றொரு புதிர் ? ! -வண்ணநிலவன்

ஒரு குட்டி பூர்ஷுவாவின் அனுபவம்

1978-79 ல் தான் எனக்கு முதல்முதலாக மார்க்ஸீய தத்துவத்துடன் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது எஸ்.வி. ராஜதுரை எழுதிய ‘அந்நியமாதல்’ என்ற புஸ்தகத்தைப் படிக்காதவன் அறிவுஜீவியே இல்லை என்ற நிலை இருந்தது. அதனால் அதை நான் இரண்டே நாளில் படித்து முடித்து அறிவுஜீவியானேன்.
அப்போது சோவியத் யூனியன் சிதறுண்டு போயிருக்கவில்லை. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்நாட்டில் ரஷ்ய மார்க்ஸிஸ்ட், சீன மார்க்ஸிஸ்ட், அல்பேனிய மார்க்ஸிஸ்ட், கிராம்ஸி ஆதரவாளர்கள், அல்தூஸர், சார்த்தர் ஆதரவாளர்கள் என்று ஏகப்பட்ட மார்க்ஸிஸ்ட்கள் திரிந்து கொண்டிருந்தனர். நான் ஒரு குட்டி பூர்ஷûவா ஆக இருந்ததால் என்மீது எந்த மார்க்ஸீய முத்திரையும் விழவில்லை. ஆனால், விதி யாரை விட்டது?
எழுபதுகளில் சென்னை தி. நகர், மகாலட்சுமி தெருவிலிருந்து ‘பிரக்ஞை’ என்ற சிறு பத்திரிகை வெளிவந்தது. தீபம், கணையாழி, கசடதபற போன்ற பத்திரிகைகளைப் போல் பெரிய சைஸில் ‘பிரக்ஞை’ வெளிவந்தது. நண்பர் ரவிஷங்கர் வீடுதான் பிரக்ஞை அலுவலகமாகச் செயல்பட்டு வந்தது. 1973 ஜூனில் நான் சென்னைக்கு வந்தது முதலே ரவிஷங்கர், வீராச்சாமி (ரங்கராஜன்), ரவீந்திரன் போன்ற நண்பர்கள் எல்லோரையும் பழக்கம்.
1976 ஜூனில் ‘துக்ளக்’ பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் செல்லுமிடங்களில் ஒன்றாக ரவிஷங்கரின் வீடு இருந்தது. ரங்கராஜன் என்ற வீராச்சாமி மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகே துர்க்காராம் தெருவில் குடியிருந்து வந்தார். தினசரி மாலை வீராச்சாமி, ரவிஷங்கரின் வீட்டுக்கு வந்து விடுவார். வீராச்சாமியுடன் எழுத்தாளர் பூமணியும் அவரது அறையிலேயே தங்கியிருந்தார்.
ஒருநாள் ரவிஷங்கர் வீட்டுக்குச் சென்றிருந்த போது அவர் ஒரு தகவலைச் சொன்னார். ‘அடுத்த வாரம் திங்கட்கிழமையிலே இருந்து தினசரி சாயந்திரம் ஒருத்தர் வந்து மார்க்ஸீய வகுப்பெடுக்கப் போகிறார். நீங்களும் வாங்க.’
ஊரில், பாளையங்கோட்டையில் இருந்தபோது பேராசிரியர் நா. வானமாமலை, கிருஷ்ணமூர்த்தி, முத்துக்கிருஷ்ணன் (நெல்லைச் செல்வன்) போன்ற இடதுசாரி நண்பர்களுடன் நட்பிருந்தாலும் மார்க்ஸீயத்தைப் பற்றி ‘அ’னா, ‘ஆ’வன்னா கூடத் தெரியாது. மேலும், நான் ஒரு புஸ்தகக் கோட்டி (பைத்தியம்). மார்க்ஸீயம் படிக்க ஒரு வாய்ப்பு வருகிறது என்றதும், ரவிஷங்கரிடம், ‘வருகிறேன்’ என்று ஒத்துக்கொண்டுவிட்டேன்.
குறிப்பிட்ட தினத்தில் மாலையில் ரவிஷங்கர் வீட்டு மாடியில் ரவிஷங்கர், வீராச்சாமி, பூமணி, பா. ஜெயப்பிரகாசம், லயனல், ரகு போன்ற நண்பர்களுடன் நானும் ஆஜராகி இருந்தேன். ஐந்தரை மணி சுமாருக்கு குள்ளமான ஒருவர் தோளில் ஜோல்னாப் பை சகிதம் வந்தார். அவர் பெயர் கண்ணன் என்று அறிமுகப்படுத்தினார்கள். பீடியை எடுத்துக் கண்ணன் பற்ற வைத்தார். நானும் அவருடன் சேர்ந்து பீடி குடித்தேன். 1978ல் பீடி, ஜோல்னாப் பை, முடிந்தால் தாடி வைத்துக் கொள்வது இவையெல்லாம் அறிவுஜீவிகளின் அடையாளமாக இருந்தன.
என்னிடமும் இவையெல்லாம் இருந்தன.
கண்ணன், தினசரி ஒருமணி நேரம் வகுப்பெடுத்தார். அவர், இந்த வகுப்பு ரகசியமானது, யாரிடமும் இதைப் பற்றிச் சொல்ல வேண்டாம் என்று வேறு அடிக்கடி சொல்லி வந்தார். எனக்குப் பயமாகி விட்டது. நண்பர் ரகு அந்த ரகசியத்துக்குப் பயந்து, வகுப்புக்கு வருவதையே நிறுத்தி விட்டார். ஒருநாள் வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, மாடிக்கு ரவிஷங்கரைத் தேடிக் கொண்டு சிவகுமார் வந்துவிட்டான் (சிவகுமார், பின்னர் தினமணியில் பணி புரிந்தான்). அவனைப் பார்த்ததும் கண்ணன் பேசுவதை நிறுத்தி விட்டார். அவனை அங்கிருந்து வெளியேற்றினால்தான் வகுப்பெடுக்க முடியும் என்று கண்ணன்
சொல்லி விட்டார்.
அவனிடம் பேசிச் சமாளித்து, ரவிஷங்கர் அவனைக் கீழே அனுப்பி வைத்தார். அவன் சென்ற பிறகு கண்ணன் சிவகுமாரை ‘அவன் ஒரு உளவாளி’ என்றார். சிவகுமாரை எனக்கு 1973 முதலே பழக்கம். அவன் வேலையில்லாதவன் என்பது தெரியும். ஆனால், அவன் எப்போது சி.ஐ.டி.யானான் என்று எழுதவில்லை. போயும் போயும் இந்தச் சிவகுமாரை உளவாளி, சி.ஐ.டி. என்கிறாரே என்றிருந்தது.
சிவகுமார் உளவாளியாக்கப்பட்டதாவது பரவாயில்லை. ஒருநாள் ரவிஷங்கர் வீட்டில் அம்பையைப் பார்த்தேன். அம்பையை அதற்கு முன்பே பழக்கம். அப்போது அம்பை டெல்லியில் இருந்தார். சென்னை வந்தால் ரவிஷங்கர் வீட்டுக்கு வராமலிருக்க மாட்டார். அப்படித்தான் அன்றும் அம்பை வந்திருந்தார். ரவிஷங்கர் வீட்டு வாசலில் ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். அம்பை அந்தப் பிச்சைக்காரனைப் பற்றி எங்களிடம், ‘அவனைப் பார்த்தா பிச்சைக்காரன் மாதிரித் தெரியலே. யாரோ சி.ஐ.டி. மாதிரி இருக்கு…’ என்று சொன்னார்.
நான் ஏற்கெனவே ஜேம்ஸ்பாண்ட் படங்களையும், ஹிட்ச்காக்கின் மர்மப் படங்களையும் பார்த்து மனம் தோய்ந்து போனவன். அதனால் அம்பை சொன்னதை நம்பாமலிருக்க முடியவில்லை. சிவகுமார்தான் ஒரு உளவாளி என்றால், இந்தத் தெருப் பிச்சைக்காரன் வடிவில் இன்னொரு உளவாளியா? மார்க்ஸீயம் கற்பது அவ்வளவு அரசாங்க விரோதமான காரியமா என்று நினைத்தேன். ரவிஷங்கரிடம் இதைப் பற்றிப் பேசியபோது, அவர் சிரித்துக்கொண்டே ‘அதெல்லாம் ஒண்ணுமில்லே வண்ணநிலவன்…’ என்றார்.
கண்ணன் மாதாமாதம் எங்களிடம் ‘லெவி’ வாங்குவார். ‘லெவி’ என்றால் ஏதோ நம்மால் இயன்ற பணத்தைக் கட்சிக்குக் கொடுக்க வேண்டும் என்பது என்றார். என்னுடைய மாதச் சம்பளமே அப்போது 350 ரூபாய் தான். இதில் நானும், என் மனைவியும், இரண்டு குழந்தைகளும் உயிர் வாழ்ந்தோம். இதில் லெவிக்கெல்லாம் நான் எங்கே போவது? என்றாலும், நானும் ஆளோடு ஆளாக மாதாமாதம் 10 ரூபாய் லெவி கொடுத்தேன். பூமணி, ஜெயப்பிரகாசம், வீராச்சாமி, ரவிஷங்கர் எல்லாம் நிறையவே லெவி கொடுத்தார்கள். புராணப் பிரவசனம் செய்கிறவர்களுக்காகப் பிரவசனம் நடந்து கொண்டிருக்கும் போதே ஒருவர் தட்டை ஏந்தி வசூல் செய்வார். அந்த மாதிரி இதுவும் ஒரு வசூல் போல என்று நினைத்தேன்.
கண்ணன் ரவிஷங்கர் வீட்டுக்கு வருவது, அங்கிருந்து செல்வது எல்லாமே பெரிய ரகசிய விஸிட் போலத்தான் இருக்கும். சில நாட்கள் திடீரென்று தன் ஜோல்னாப் பையிலிருந்து ஏழெட்டு பக்கங்கள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தை எடுத்து ரகசியமாக எல்லோருக்கும் வழங்குவார். இப்படி கண்ணனின் காரியங்கள் எல்லாமே ஒரே ரகசியமாக இருந்தன.
வகுப்பு முடிந்துவிட்டது. கண்ணன் ரகசியமாக லெவி வசூலிப்பதும், துண்டுப் பிரசுரங்களைக் கொடுப்பதும் தொடர்ந்தது. ஒருநாள் வீராச்சாமி எங்களையெல்லாம் அழைத்து, வருகிற ஞாயிற்றுக்கிழமை சிந்தாதரிப்பேட்டை கார்ப்பரேஷன் பள்ளியில் நமது செயல்திட்டத்தை வகுப்பதற்காகக் கூடுகிறோம், காலை பத்து மணிக்கு வந்துவிடுங்கள் என்றார்.
கண்ணன் ஏதோ கட்சிக்கு லெவி என்றார். அது என்ன கட்சி, அதன் தலைமையகம் எங்கே இருக்கிறது, அதன் தலைவர் யார் என்றெல்லாம் தெரியாமலே லெவி கொடுத்தோம். இப்போது வீராச்சாமி செயல்திட்டம் என்கிறாரே. என்ன செயல், என்ன திட்டம் என்று புரியவில்லை. என்றாலும், அந்தக் கூட்டத்துக்குப் போனேன். மாடியில் ஒரு வகுப்பறையில் சுமார் 40 பேர் இருந்தார்கள். தீர்மானம் மாதிரி வரிசையாக எழுதப்பட்ட சில வாசகங்கள் அடங்கிய தாளை எல்லோருக்கும் கொடுத்தார்கள். அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவம், வர்க்கம் என்று கண்ணன் வகுப்பெடுத்தபோது சொன்ன சொற்களாகவே அவை இருந்தன. மதியத்திற்கு மேலும் கூட்டம் தொடர்ந்தது. எனக்குப் போரடித்தது. அதனால் நைஸாக நழுவி வெளியே வந்துவிட்டேன்.
அந்தக் கூட்டத்தில்தான் மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைக்கத் தீர்மானமாகி முடிவெடுக்கப்பட்டது. வீராச்சாமியின் நண்பர்கள் இதை உருவாக்கினார்கள். வீராச்சாமிக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. வீராச்சாமிதான் ஒருநாள் ‘புதிய ஜனநாயகம்’ பத்திரிகை பற்றியும் பேசினார். புதிய ஜனநாயகம் பத்திரிகையின் விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அவை வறட்டுத்தனமாக இருந்தன.
பிறகு பா. ஜெயப்பிரகாசம் சில நண்பர்களுடன் புதிய ஜனநாயகத்தைப் போல ‘மன ஓசை’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். ஜெயப்பிரகாசம், பூமணி எல்லாம் மன ஓசையில் எழுதினார்கள். நான் புதிய ஜனநாயகத்திலும் எழுதவில்லை, மன ஓசையிலும் எழுதவில்லை. என்னுடைய இயல்பு, மனப்போக்குக்கு அவை ஒத்து வரவில்லை. ‘மன ஓசை’ இப்போது வெளிவரவில்லை. புதிய ஜனநாயகம் மட்டும் வெளிவந்து கொண்டிருக்கிறது. ம.க.இ.க. இப்போது தமிழகமறிந்த ஒரு சிறு இயக்கமாகக் காட்சியளிக்கிறது. எங்களுக்கு வகுப்பெடுத்த கண்ணனை அதன்பிறகு நான் இன்று வரை சந்திக்கவே இல்லை. நானொரு குட்டி பூர்ஷுவா. அதனால்தான் ம.க.இ.க.வில் சேரவில்லை என்று நினைக்கிறேன்.
thanks to /ஆழம்

Friday 13 July 2012

Rates of room charges of Holiday Homes


Government of India
Ministry of Urban Development
Directorate of Estates
Nirman Bhawan, New Delhi.
Dated 10th July, 2012.
Office Memorandum
Subject: Rates of room charges of Holiday Homes and Touring Officer Hostel under M/O Urban Development- Revision thereof.
In supersession of this Directorate’s O.M. of even No. dated 30th January, 2012, the undersigned is directed to say that the rate of booking charges of rooms/suits in Holiday Homes, Touring Officers’ Hostels/Guest Houses under the control of Directorate of Estates have been revised with the approval of the Hon’ble Minister of Urban Development. The revised rate list on per day basis is enclosed for information and necessary action.

2. The revised rates shall be applicable from the date of issue of this O.M.
sd/-
(R. N. Yadav)
Deputy Director of Estates (Policy)
Annexure to O.M. No.D-110128/23/82/-Regions (Vol.II) dated 10th July, 2012.
Category of holiday home and Touring Officers Hostel/guest house.
Location of Holiday, Homes and Touring Officers Hostel/Guest house
Category
Delhi, Mumbai, Kolkata, Chennai,Goa, Shimla, Nainital, Mussoorie, Udaipur, Agra, Mysore.
A
Cochin, Trivandrum,Ooty,Jaipur,Bangalore,Kanyakumari.
B
All other cities/towns excluding those mentioned in Cat. “A” and ‘“B”
C
Revised Booking Charges
FOR CATEGORY ‘A’
Room / suite
Category of applicants/ Visitors
1
2
3
4
Member of Parliament
(For their own stay)
Central Govt. employee
(Serving/retired)
Employees of State Govt./UTs/Central or State PSU/Autonomous Bodies/Others
(Serving/Retired)
Private Persons accompanying as guests of
MPs/ Govt. employees
VIP
Rs. 150
Rs. 900
Rs. 1800
Rs. 2700
Double/Three
bedded AC
Rs. 150
Rs. 330
Rs. 630
Rs. 930
Double/Three
bedded Non AC
Rs. 150
Rs. 330
Rs. 600
Rs. 900
Four bedded AC
Rs. 150
Rs. 430
Rs. 830
Rs. 1230
Four bedded
Non-AC
Rs. 150
Rs. 400
Rs. 800
Rs. 1200
Dormitory
(per bed)
Rs. 150
Rs. 150
Rs. 300
Rs. 300
FOR CATEGORY ‘B’
Room / suite
Category of applicants/ Visitors
1
2
3
4
Member of Parliament
(For their own stay)
Central Govt. employee
(Serving/retired)
Employees of State Govt./UTs/Central or State PSU/Autonomous Bodies/Others
(Serving/Retired)
Private Persons accompanying as guests of
MPs/ Govt. employees
VIP
Rs. 150
Rs. 600
Rs. 1200
Rs. 1800
Double/Three
bedded AC
Rs. 150
Rs. 230
Rs. 430
Rs. 630
Double/Three
bedded Non AC
Rs. 150
Rs. 200
Rs. 400
Rs. 600
Four bedded AC
Rs. 150
Rs. 280
Rs. 530
Rs. 780
Four bedded
Non-AC
Rs. 150
Rs. 250
Rs. 500
Rs. 750
Dormitory
(per bed)
Rs. 150
Rs. 100
Rs. 200
Rs. 200
FOR CATEGORY 'C'

Room / suite
Category of applicants/ Visitors

1
2
3
4

Member of Parliament
(For their own stay)
Central Govt. employee
(Serving/retired)
Employees of State Govt./UTs/Central or State PSU/Autonomous Bodies/Others
(Serving/Retired)
Private Persons accompanying as guests of
MPs/ Govt. employees

VIP
Rs. 150
Rs. 450
Rs. 900
Rs. 1350

Double/Three
bedded AC
Rs. 150
Rs. 180
Rs. 330
Rs. 480

Double/Three
bedded Non AC
Rs. 150
Rs. 150
Rs. 300
Rs. 450

Four bedded AC
Rs. 150
Rs. 230
Rs. 430
Rs. 630

Four bedded
Non-AC
Rs. 150
Rs. 200
Rs. 400
Rs. 600

Dormitory
(per bed)
Rs. 150
Rs. 50
Rs. 100
Rs. 100